அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும்!

தமிழ்- சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரத்திலும் தொடருவதற்கு எரிசக்தி அமைச்சுத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய  அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு இன்று முதல் புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாட்களின் நுகர்வு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைத் தொடர்வதா? என்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்- சிங்களப் புத்தாண்டை முன்னிட்டுக் கடந்த-4 ஆம் திகதி நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கம் 5 லீற்றரிலிருந்து 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கான எரிபொருள் ஒதுக்கம் 4 லீற்றரிலிருந்து 7 லீற்றராகவும், பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கம் 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகள் மற்றும் சிற்றூர்திகளுக்கான எரிபொருள் ஒதுக்கம் 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், பாரவூர்திகளுக்கான எரிபொருள் ஒதுக்கம் 50 லீற்றரிலிருந்து 70 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.