உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு: வெளியானது வர்த்தமானி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும்- 25 ஆம் திகதி திட்டமிட்டப்படி நடத்த முடியாது எனக்  குறிப்பிட்டுச் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரியினால் நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் அல்லது உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்கின் தீர்ப்பை அடுத்து தேர்தல் இடம்பெறும் புதிய தினத்தை அறிவிப்பதாகவும் அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கூடிய தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திகதி அறிவிப்பு இன்றிப் பிற்போட்டது. இதனையடுத்து மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.