ஒரு லட்சம் குரங்குகளைக் கோரவில்லை: சீனத் தூதரகம் மறுப்பு!


ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையின் எந்தத் தரப்பினரிடமும் தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதரகம் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.  

சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி, ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீனத் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ் விடயம் தொடர்பில் தாம் வினாவிய போதும் அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை எனவும் சீனத் தூதரகம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.