கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டின் தரம்-05 ஆம் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை 06 ஆம் தரத்திற்குப் பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் இன்று வெள்ளிக்கிழமை(21.04.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம்-8 ஆம் திகதி நள்ளிரவு-12 மணி வரையில் இணையத்தள முறைமையில் மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் பாடசாலைகள் தொடர்பான அட்டவணையைப் பார்வையிடவும், மேன்முறையீட்டை முன்வைக்கவும் www.moe.gov.lk எனும் தமது இணையத்திற்குப்  பிரவேசிக்குமாறும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.