அலங்கரிக்கப்பட்ட உழவியந்திரத்தில் கிராம உலா வந்த குப்பிழான் கன்னிமார் கெளரித் தாய்


யாழ். குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுக் கிராம ஊர்வலம் நேற்றுத் திங்கட்கிழமை(08.05.2023) காலை-09 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷங்களுடன் மேற்படி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.  

அலங்கரிக்கப்பட்ட சிறியரக உழவியந்திரத்தில் அம்பாள் கிராமம் முழுவதும் வலம் வந்ததுடன் கிராமத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆலய நிர்வாகத்தினரும், வீட்டு வாசல்கள் தோறும் அடியவர்களும் பூரண கும்பம் வைத்தும், பல விதமான பிரசாதங்கள் படைத்தும் எல்லாம் வல்ல கெளரித் தாயை வழிபட்டனர்.       


(செ.ரவிசாந்)