வேலணைப் பிரதேச செயலகத்தில் நாளை வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம்

வேலணைப் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை(10.05.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை வேலணைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் வேலணைப் பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களையும், குருதிக் கொடையாளர்களையும் மற்றும் ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானம் வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0773868586 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.