பாடசாலைப் பைகள், அப்பியாசப் புத்தகங்களின் விலை மேலும் குறையும் சாத்தியம்!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலைப் பைகள், அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் காலணிகளின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.