சிவத்தமிழ்ச் செல்வியின் பதினைந்தாவது ஆண்டு குருபூசை வைபவம் நாளை

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய முன்னாள் பெருந் தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினைந்தாவது ஆண்டு குருபூசை வைபவம் ஆனிமாத விசாக நன்னாளான நாளை வெள்ளிக்கிழமை(30.06.2023) காலை-09 மணி முதல் மேற்படி ஆலய அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர். சிவசுப்பிரமணியம் ரகுராம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்வில் நான்கு மூத்த சிவாச்சாரியார்கள் சிவத்தமிழ் விருது வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர்.