கறுப்பு ஜீலையின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு

  

கறுப்பு ஜுலையின் 40 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(27.07.2023) மாலை-04.30 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 



இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிறீகாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.அரியநேந்திரன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்களும்  கலந்து கொண்டனர்