ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டம்

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான  மறைந்த செல்வி.சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை(06.08.2023) மாலை-03 மணி முதல் இரவு-07.30 மணி வரை ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யுஎஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

செல்வி.சாந்தா அபிமன்னசிங்கத்தின் இளநிலைச் சட்டத்தரணிகளால் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.