கொக்குவிலில் இரத்ததான முகாம்: 32 பேர் ஆர்வத்துடன் குருதிக் கொடை

கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையமும், கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுத்த இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (24.09.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02.30 மணி வரை கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.



இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் மேற்படி இரண்டு சனசமூக நிலையங்களினதும் உறுப்பினர்கள், கிராமத்தவர்கள் என 32 ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. 


(செ.ரவிசாந்)