சுன்னாகத்திலும், சங்குவேலியிலும் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கூட்டங்கள்

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வட்டாரம்-08 இல் ஜே-198, ஜே-199 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும், வட்டாரம்-10 இல் ஜே-187 கிராம சேவகர் பிரிவுக்குட்ட பகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தித் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளைத் தெரிவு செய்தல் மற்றும் செயற்படுத்தலைப் பொதுமக்களின் பூரண பங்கேற்புடன் செயற்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பில் வட்டாரத்திற்கு உட்பட்டதும், அவசியம் செய்ய வேண்டியதுமான அபிவிருத்தித் திட்டங்களை இனம் கண்டு முன்னுரிமைப்படுத்தல் தொடர்பான கூட்டம் ஜே-198, ஜே-199 கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு நாளை திங்கட்கிழமை(04.09.2023) காலை-09.30 மணியளவில் சுன்னாகம் பொதுச் சந்தையின் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள வர்த்தக சங்கத்தின் மாநாட்டு மண்டபத்திலும், ஜே-187 கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு நாளை பிற்பகல்-02 மணியளவில் சங்குவேலி பொது மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது. 

மேற்படி இரு கூட்டங்களிலும் அனைத்துப் பொதுமக்களும் கலந்து கொண்டு தேவையான தகவல்களை வழங்கி அபிவிருத்தியில் பங்கேற்குமாறு வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் கேட்டுள்ளார்.