குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் அறநெறி மாணவர்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையும் நற்சிந்தனையும்

 


அறநெறி மாணவர்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையும் நற்சிந்தனை வழங்கலும் நிகழ்வு இன்று  வெள்ளிக்கிழமை(15.09.2023) மாலை-04 மணி முதல் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.



குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவச் சிறார்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். நிகழ்வில் மாணவர்கள் பலரும் பண்ணுடன் பஞ்சபுராணம் ஓதுவதற்கான சந்தர்ப்பம் தனித்தனியாக வழங்கப்பட்டது.  

ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஆன்மீக நற்சிந்தனை வழங்கினார். அதனைத் தொடர்ந்து  ஓய்வுநிலைக் கிராம சேவகர் சோ.பரமநாதனால் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியாகப் பதிலளித்த மாணவர்களுக்குப் பாராட்டுக்களும் வழங்கப்பட்டன. 

இதேவேளை, இதுவரை சைவத்தமிழரின் கலாசாரம் சார்ந்த உடை வழங்கப்படாத இரு மாணவர்களுக்கு குறித்த நிகழ்வில் வைத்து உடைகள் வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)