கோண்டாவிலில் நாளை வருடாந்த சித்திர ஆக்கக் கண்காட்சி

கோண்டாவில் கிழக்கு ஶ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தினதும் குமரன் விளையாட்டுக் கழகத்தினும் ஆதரவில் இயங்கும் குட்டிச்சுட்டி முன்பள்ளி, அகம் குழந்தைகள் பகல் நேர காப்பக மாணவர்களின் வருடாந்த சித்திர ஆக்க கண்காட்சி -2023 நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(27.10.2023) மேற்படி முன்பள்ளியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி சனசமூக நிலையத் தலைவர் து.சுதன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்.கோண்டாவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் கணபதிப்பிள்ளை நித்தியானந்தன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை அதிபர் கணிதச்சுடர் சண் வாமதேவன், ஊடகவியலாளர் செல்வநாயகம் ரவிசாந் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.