எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்!

இன்று வியாழக்கிழமை (30.11.2023) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாகவிருந்த நிலையில் 346 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 423 ரூபாவாகவிருந்த நிலையில் 426 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 27 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாகவிருந்த நிலையில் 329 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 431 ரூபாவாகவிருந்த நிலையில் 434 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 249 ரூபாவாகவிருந்த நிலையில் 247 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.