நாடெங்கிலுமுள்ள சாயி நிலையங்கள் இணைந்து யாழில் மஹா ருத்ர சாதனை நிகழ்வு


இலங்கையில் முதல்முறையாக சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த நாடெங்கிலும் உள்ள சாயி நிலையங்கள் இணைந்து மேற்கொள்ளும் உன்னத சாதனையான மஹா ருத்ர சாதனை நிகழ்வு நாளை சனிக்கிழமை(02.12.2023) ஆரம்பமாகி எதிர்வரும்-10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை திருநெல்வேலியில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

நாளை முதல் 09 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினமும் மாலை-05 மணி முதல் இரவு-08 மணி வரையும், நிறைவுநாளான எதிர்வரும்-10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை- 04.30 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரையும் மஹா ருத்ர சாதனை நடைபெறுமெனவும், அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்