கோண்டாவிலில் நாளை குடைச் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு

 


ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை சனிக்கிழமை (20.01.2024) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் இடம்பெற உள்ளது.  

காலை-08.30 மணியளவில் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமாகித் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் குருபூசை நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து விசேட அன்னதானமும் நடைபெறும்.