புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களைச் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்தார். 

கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் தகுதிபெற்ற 4000 பேரை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.