ஆரம்பமானது குப்பிழான் கன்னிமார் கெளரித் தாயின் மஹோற்சவம்

குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) முற்பகல்-11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் வேண்டித் துதி செய்தனர்.  

இதேவேளை, தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறவுள்ளது. இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-07 மணியளவில் வசந்த உற்சவமும், 20 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-05 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.