இளவாலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

இளவாலை சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் விதையனைத்தும் விருட்சமே இளைஞரணியினருடன் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை  ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) காலை-08.30 மணி முதல் மாலை-03.30 மணி வரை இளவாலை சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.