பண்ணையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஏழாலையில் நாளை இலவச நடமாடும் சேவை

உடுவில் கால்நடை மருத்துவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் பண்ணையாளர் களுக்கான இலவச நடமாடும் சேவை நாளை வெள்ளிக்கிழமை (14.06.2024) காலை- 09 மணி தொடக்கம் மாலை- 03 மணி வரை ஏழாலைச் சந்தியில் அமைந்துள்ள ஏழாலை வடக்கு கிழக்கு வாசிகசாலையில் இடம்பெறவுள்ளது.

குறித்த நடமாடும் சேவையில் கால்நடைகளுக்கான மருத்துவ சேவை, கால்நடை வளர்ப்புத் தொடர்பிலான ஆலோசனை, தடுப்பு மருந்து வழங்கல், மாடுகளுக்குக் காதடையாளமிடல், பண்ணைகளைப் பதிவு செய்தல், திணைக்களப் பிரசுரங்கள் வழங்குதல் போன்ற சேவைகள் இலவசமாக வழங்கப்படும்.

இதேவேளை, மேற்படி இலவச நடமாடும் சேவையில் ஏழாலைக் கிராமத்தவர்கள் மட்டுமன்றி அயற் கிராமத்தவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றுக் கொள்ள முடியுமென உடுவில் கால்நடை மருத்துவர் அலுவலகப் பொறுப்பதிகாரி மருத்துவர் ஆர்.மீனயோகினி தெரிவித்தார்.