முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படைப் பாதுகாப்பு நீக்கம்!

                               

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று திங்கட்கிழமை (23.12.2024) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்புத் தொடர்ந்தும் வழங்கப்படுமெனப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை மீளப் பெறுவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.