கரவெட்டியில் பிரதேசப் பண்பாட்டு விழா

வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச செயலகமும், வடமராட்சி தெற்கு மேற்கு கலாசாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரதேசப் பண்பாட்டு விழா-2024 நாளை புதன்கிழமை (04.12.2024) பிற்பகல்-02 மணி முதல் கரவெட்டி மாலைசந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


கரவெட்டிப் பிரதேச செயலாளரும், கலாசாரப் பேரவைத் தலைவருமான ஈஸ்வரானந்தன் தயாரூபன் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த  நிகழ்வில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும், யாழ்.மாவட்டச் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணலினி விஜயரட்ணம் சிறப்பு விருந்தினராகவும், மூத்த கலைஞர்களான கிருஷ்ணபிள்ளை நடராசா, திருமதி.தம்பு சரோஜா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.