'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக தின உற்சவம் தை அத்த நாளாகிய நாளை திங்கட்கிழமை (20.01.2025) காலை-07 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம், பூசை என்பன இடம்பெறும். வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து அம்மனின் வீதி உலாவும் நடைபெறும். இறுதியில் மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) நடைபெறும்.