கும்பாபிஷேக தினம் காண்கிறாள் மயிலணி முத்துமாரி அம்மன்

'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி  ஸ்ரீ முத்துமாரி  அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக தின உற்சவம் தை அத்த நாளாகிய நாளை திங்கட்கிழமை (20.01.2025) காலை-07 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.  

அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம், பூசை என்பன இடம்பெறும். வசந்த மண்டபப்  பூசையைத் தொடர்ந்து அம்மனின் வீதி உலாவும் நடைபெறும். இறுதியில் மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) நடைபெறும்.