இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபை இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலி சிவன் ஆலயம் வரை முன்னெடுக்கும் புனித திருத்தலத் தரிசன யாத்திரை நாளை வெள்ளிக்கிழமை (07.02.2025) காலை-06.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்
குறித்த தரிசன யாத்திரை நிகழ்வில் கலந்து கொள்ள முற்பதிவு செய்த அடியவர்களை உரியநேரத்திற்கு தரிசன யாத்திரை நிகழ்வின் ஆரம்ப இடத்திற்கு வருகை தருமாறு யாத்திரை ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.