மகாசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பம்

சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு உலக சைவத் திருச் சபை, திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகர்கள் சேவா சங்கம் இணைந்து முன்னெடுக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய சிவனடியார்களின் பாதயாத்திரை நாளை வியாழக்கிழமை (20.02.2025) காலை-08 மணியளவில் தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

பாதயாத்திரை எதிர்வரும்-26 ஆம் திகதி புதன்கிழமை மகாசிவராத்திரி தினத்தன்று காலை திருக்கேதீச்சரம் ஆலயத்தைச் சென்றடையுமெனவும்,  பாதயாத்திரையில் இலங்கையின் எப் பாகத்திலிருந்தும் சிவனடியவர்கள் இணைந்து கொள்ள முடியுமெனவும் பாதயாத்திரை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.