நல்லூரில் நாளை செல்லப்பா சுவாமிகளின் குருபூசை

ஈழத்துச் சித்தர் நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை திங்கட்கிழமை (03.03.2025) காலை-09 மணி முதல் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் நல்லூர் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.        

திருமுறை, நற்சிந்தனைப் பாடல்களைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் தற்காலச் சமயநிலை தொடர்பில் ஓய்வுநிலை விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தன் கலந்து கொண்டு உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து செல்லப்பா சுவாமிகளின் குருபூசை வழிபாடுகளும் நடைபெறும்.