ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்றுச் சனிக்கிழமை (01.03.2025) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து பன்னிரண்டு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.
எதிர்வரும்-11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09 மணியளவில் தேர்த் திருவிழாவும், 12 ஆம் திகதி புதன்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணியளவில் கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறும்.