தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். நெடுந்தீவில் கைதான இராமேஸ்வரம் மீனவர்கள் மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிறைபிடிக்கப்படுவதால் அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வௌியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.