தபால்மூல வாக்கெடுப்புத் திகதிகள் அறிவிப்பு!

உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளதாகவும், இதற்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் ஏப்ரல்-07 ஆம் திகதி விநியோகிக்கப்படுமெனவும் தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்காக ஏப்ரல் மாதம்-28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.