உயர்தரப் பரீட்சை மீளாய்வு விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம்-02 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகள் ONLINE EXAMS.GOV.LK எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்துப் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை, இம் முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய 1,77,588 பேர் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.