இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலையான தன்மையைப் பெற்றிருந்தாலும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலக வங்கி 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கைக்கான அபிவிருத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளைக் காட்டி வருகிறது. எனினும், நாட்டில் வறுமையின் அபாயம் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.