விதையனைத்தும் விருட்சமே குழுமமும், கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் ஆகிய பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளைய அதிகாரத்தின் எழுச்சி அமைப்பின் அனுசரணையுடன் நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.04.2025) யாழ்.கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 43 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.