யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கடும் இரத்தத் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு அரியாலை சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (26.04.2025) காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 18 வயது முதல் 50 வயது வரையான அனைவரும் கலந்து கொண்டு உதிரம் தந்து உயிர் காத்திட முன்வருமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.