ஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை நன்னாளான புதன்கிழமை (30.04.2024) காலை முதல் தங்க நகைகளின் விலை அதிகரிப்புக்கு மத்தியிலும் யாழ். நகரில் அமைந்துள்ள நகைக் கடைகளில் தங்க நகை வியாபாரம் சூடு பிடித்திருந்தமையைக் காண முடிந்தது.
வழமையாக அட்சய திருதியை நாளில் நகைக் கொள்வனவில் ஈடுபடும் வாடிக்கையாளர்களுடன் புதிய வாடிக்கையாளர்களும் நகைக் கொள்வனவில் அதிகளவில் ஆர்வம் செலுத்தினர். யாழ்.நகர் மட்டுமன்றி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள பல பகுதிகளிலும் நகை வியாபாரம் வழமையை விட அதிகரித்துக் காணப்பட்டது.
அட்சய திருதியை நாளை முன்னிட்டு நகைக் கடைகள் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தங்க நகைகள் கொள்வனவு செய்தவர்களுக்கு நகைக் கடைகளில் விசேட சலுகையும் சிறப்புப் பரிசில்களும் வழங்கப்பட்டது.