சிவபேறடைந்தார் நல்லை ஆதீன முதல்வர்!

நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வியாழக்கிழமை (01.05.2025) இரவு கொழும்பில் தனது-69 ஆவது வயதில் சிவசாயுச்சியம் எய்தினார்.

கொழும்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றவேளை கம்பன் கழக மண்டபத்தில் அவர் இறைபேறடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.         

அவரது மறைவு சைவத்தமிழ்மக்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. தூய துறவறம் பூண்டு சைவத்திற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒப்பற்ற பெருந்தகையின் ஆத்மா எல்லாம் வல்ல இறையடியில் சாந்திபெறப் பிரார்த்திக்கின்றோம்.