உள்ளுராட்சி சபைத் தேர்தல் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06.05.2025) இடம்பெற்ற நிலையில் இன்று யாழ்.மாவட்டத்தில் பத்திரிகைகளுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
உள்ளுராட்சிசபைத் தேர்தல் தொடர்பான உண்மை நிலவரங்களை அறிவதற்காக மக்கள் பத்திரிகைகளைக் கொள்வனவு செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால், யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் அனைத்துமே கிராமங்களில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களிலேயே இன்று மதியத்துக்கு முன்னர் விற்றுத் தீர்ந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.