யாழ்.மல்லாகம் மகா வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) முற்பகல்-11.30 மணியளவில் யாழ்.மல்லாகம் மகாவித்தியாலய மண்டபத்தில் அதிபர் சி.கணேசராசா தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா பிரதம விருந்தினராகவும், யாழ்.மயிலணி சைவமகா வித்தியாலய அதிபர் பா.பார்த்தீபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.