வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், இறை பக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போன்று இவ் வருடமும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் மேற்படி ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் நடைபெறும்.
பஜனை கொடியேற்றத் திருவிழாவான இன்று செவ்வாய்க்கிழமை (29.07.2025) தொடக்கம் கொடியிறக்கத் திருவிழாவான அடுத்த மாதம்-22 ஆம் திகதி வரை முருகப் பெருமான் மாலை வேளையில் வெளிவீதி வலம் வரும் போது இடம்பெறும்.
பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லூர்க் கந்தப்பெருமானின் திருவருளைப் பெற வருமாறு பாடசாலை மாணவர்களையும், அறநெறிப் பாடசாலை மாணவர்களையும், முருகப்பெருமான் அடியவர்களையும் சிவகுரு ஆதீனம் கேட்டுக் கொண்டுள்ளது.
பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லூர்க் கந்தப்பெருமானின் திருவருளைப் பெற வருமாறு பாடசாலை மாணவர்களையும், அறநெறிப் பாடசாலை மாணவர்களையும், முருகப்பெருமான் அடியவர்களையும் சிவகுரு ஆதீனம் கேட்டுக் கொண்டுள்ளது.
பஜனையில் பங்குபற்ற விரும்புகின்ற பாடசாலைகளும், (அதிபர் அல்லது பொறுப்பாசிரியர் அல்லது சைவசமய ஆசிரியர் அல்லது சங்கீத ஆசிரியர் அல்லது ஆசிரியர் அல்லது அறநெறி ஆசிரியர்) ஆன்மீக, சமய நிறுவனங்களும், மேலதிக விபரங்களைப் பெற விரும்புகின்ற ஆர்வலர்களும் 0772220103 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.