நல்லூர் முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் WASPAR & Young Water Professionals இன் ஏற்பாட்டில் பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் வரும் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை நீர்வளக் கண்காட்சி இடம்பெற்று வருகிறது.
குறித்த கண்காட்சியின் ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு அரங்க செயற்பாட்டு குழுவின் பாடலும் பறைதலும் அரங்க நிகழ்வும்,
அதனைத் தொடர்ந்து "எமது நீரே எம்மைக் காக்கும்" எனும் தொனிப்பொருளில் எந்திரி சர்வா சர்வராஜா அவர்களின் கருத்துரையும் அதனைத் தொடர்ந்து உரையாடலும்,
அதனைத் தொடர்ந்து மூன்றாவது நிகழ்வாக ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவி செல்வி ஜதுர்ஷியா ஜீவானந்தன் அவர்களின் நடன நிகழ்வும் இடம்பெறும்.