நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கு வியாழக்கிழமை (21.08.2025) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார்.
பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.