நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளில் பரதநாட்டிய ஆற்றுகையும், "யாழ்ப்பாணத்துக் குளங்கள்" கருத்துப் பகிர்வும்


 வடக்கு நீர்வள உரையாடல் வட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15.08.2025) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. 

வவுனியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் தொடர்பியல் (Environmental Communication) மாணவர்கள் 30 பேர் தங்கள் விரிவுரையாளர்களுடன் நல்லூரில் இடம்பெறும் நீர்வளக் கண்காட்சியை இன்று புதன்கிழமை மதியம் பார்வையிடுகிறார்கள். 

அந்த மாணவர்களுக்கு இரண்டாவது ஆண்டாக விரிவுரைகளை நிகழ்த்தி வரும் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்கள் குறித்த கண்காட்சியை ஒரு சூழல் தொடர்பாடல் அனுபவமாக கொண்டு அதனை பார்வையிடுவதும் மதிப்பிடுவதும் தொடர்பில் நல்லூர் நீர்க்கண்காட்சிக்களம் அம்மாணவர்களுக்கான புதிய வகுப்பின் ஆரம்பமாகவும்  இருக்கும். 

 நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 




 நீர்வளக் கண்காட்சியின் ஊருணி அரங்கில் ஐந்தாம் நாளான இன்று புதன்கிழமை 20.08.2025 மாலை 6.30 மணிக்கு சித்தாகாஸ் நடன நிறுவனத்தின் இயக்குனரான இராசையா தனராஜின் பரதநாட்டிய ஆற்றுகையும், தொடர்ந்து கட்டிடக் கலைஞரும், எழுத்தாளருமான இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்களால் யாழ்ப்பாணத்துக் குளங்கள் என்கிற தலைப்பிலான கருத்துரையும், கலந்துரையாடலும் இடம்பெறும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------