தலைசிறந்த சத்திரசிகிச்சை நிபுணர் சுதர்சனின் இறுதி யாத்திரை தொடர்பான அறிவிப்பு

யாழ்பாணம் போதனா வைத்தியசாலையின் பொதுச் சத்திரசிகிச்சை நிபுணரும், குழாய்வழி சத்திர சிகிச்சை இமயம் எனப் போற்றப்படுபவருமான வெங்கடாசலம் சுதர்சன் கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு கருத்துரை வழங்குவதற்காகச் சென்ற போது திடீர் மாரடைப்புக் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) தனது-49 ஆவது வயதில் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞானவைரவர் வீதி, கோண்டாவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) முற்பகல்-11 மணியளவில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் பிற்பகல்-12.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படுமென அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.