கோண்டாவிலில் மாபெரும் இரத்ததான முகாம்: காத்திருக்கும் பரிசில்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது அதிகரித்துள்ள இரத்தத் தேவையைக் கருத்திற் கொண்டு  கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும், குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (07.12.2025) காலை-08.30 மணி முதல் மாலை-03 மணி வரை கோண்டாவில் குட்டிச்சுட்டி முன்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில்  குருதிக் கொடை வழங்கும் அனைவருக்கும் விசேட பரிசில் வழங்கப்படவுள்ளதுடன் மூவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டுத் தலா மூவாயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்படும். 

இதேவேளை, குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.