யாழ். குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் தை அமாவாசை தினத்தை ஒட்டிய அபிராமிப்பட்டர் உற்சவம் நாளை சனிக்கிழமை (21.01.2023) மாலை சிறப்புற இடம்பெற உள்ளது.
நாளை மாலை-05.30 மணியளவில் விசேட அபிஷேக பூசைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி ஓதும் நிகழ்வும் இடம்பெறும்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)