கோண்டாவிலில் பக்திபூர்வமாக குடைச் சுவாமிகள் குருபூசை நிகழ்வு

ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் வருடாந்தக் குருபூசை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.02.2023) யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.



நேற்றுக் காலை-08 மணியளவில் சிறப்புப் பஜனை, கூட்டுப் பிரார்த்தனை என்பன ஆரம்பமாகி நண்பகல்-12 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெற்றது. தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் சிறப்பு அபிஷேகமும், நண்பகல்-12 மணியளவில் குருபூசை சிறப்புப் பூசை வழிபாடுகளும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேற்படி குருபூசை நிகழ்வில் கோண்டாவில் கிராமம், அயற் பகுதிகள் மற்றும் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.             



(செ.ரவிசாந்)