கோண்டாவிலில் நாளை குடைச் சுவாமிகளின் குருபூசை

ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் வருடாந்தக் குருபூசை நிகழ்வு கோண்டாவில் சந்தி வர்த்தகர்களின் நிதிப் பங்களிப்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை(26.2.2023) யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெறும்.

நாளை காலை-08 மணியளவில் சிறப்புப் பஜனை, கூட்டுப் பிரார்த்தனை என்பன ஆரம்பமாகி இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் குருபூசை நிகழ்வுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் என மேற்படி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.