யாழ்.வண்ணை கன்னாதிட்டி காளி அம்பாள் மஹோற்சவம் ஆரம்பம்

யாழ்.வண்ணை கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(26.02.2023) காலை-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறும். 

இவ் ஆலய மஹோற்சவத்தில் அடுத்த மாதம்-05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09.30 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-05 மணிக்கு  வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும் என மேற்படி ஆலய ஆதீன கர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.   


 (செ.ரவிசாந்)