உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு கோரி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் தேர்தலுக்கான பணத்தை விடுவிப்பதற்குத் தமது அனுமதி மாத்திரம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஏப்ரல்-25ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.