இணுவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு நாளை

யாழ்.இணுவில் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(03.03.2023) பிற்பகல்-01 மணி முதல் மேற்படி கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் வே.உதயமோகன் தலைமையில் இடம்பெற உள்ளது.

நிகழ்வில் வலிகாமம் வலய தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை சந்திரலிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரிச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.